காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகாள் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய நவம்பர் 15ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-29 05:15 GMT

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.

கடந்த ஒரு மாத காலமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தற்போது வரை எழுபத்தி எட்டு ஏரிகள் தனது முழு கொள்ளளவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டியுள்ளது.

மழைப்பொழிவு, நீர்த்தேக்கம் உள்ளிட்டவைகளால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தங்களது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் தங்களது பயிர்களை பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து எதிர்பாராத பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாய கூட்டங்களில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது ராபி பருவத்தில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் நவம்பர் 15 ம் தேதிக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News