ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-13 12:30 GMT

கஞ்சா கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர்  கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை மாவட்டத்தில் விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் 400 அடி பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகமான முறையில் சென்னை மார்கமாக சென்ற  ஆட்டோவினை நிறுத்தி சோதனை செய்தபோது  பெருங்களத்தூரை சேர்ந்த ஜான் லுக் மகி , கபிலன் , மோகன்குமார் ஆகியோர் முன்னுக்கு முரணாக பேசினர்.

இதில் சந்தேகம் அடைந்து  போலீசார் ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News