காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்
காஞ்சிபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாளும் , தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி வரதராஜப் பெருமாள் கோயிலின் மாட வீதிகளில் வீதியுலா வந்து கோயிலுக்கு திரும்பினார்.
விளக்கொளிப் பெருமாளுடன் தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் உடன் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தூப்புல் வேதாந்த தேசிகன் சுவாமிகள், அவதார ஸ்தல மண்டகப்படிக்கு எழுந்தருளி, அங்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடந்தது.
மாலையில் மீண்டும் விளக்கொளிப் பெருமாள் தங்கக் கேடயத்தில் வீதியுலா வந்து ஆலயத்துக்கு திரும்பினார். விழாவை முன்னிட்டு பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது.