வெகு விமர்சையாக நடைபெற்ற பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

பூக்கடை சத்திரம் பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயம் காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் குல சத்திரியர் சங்கம் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

Update: 2024-02-08 07:30 GMT

காஞ்சிபுரம் பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியார் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய போது.

காஞ்சிபுரம் பூக்கடை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்களும், திவ்ய தேசங்களும் அடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு அம்மன், முருகன் ஆலயங்களும் உள்ளது. 

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே வன்னிய குல சத்திரிய சங்கத்தின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு புனரமைக்கும் நோக்கில் பல லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகம் மற்றும் விமான கோபுரம், முருகர் நவகிரகம் விநாயகர் உள்ளிட்ட தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை 9 மணி அளவில் ஆறாம் காலை பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி மற்றும் கலச புறப்பாடு நடைபெற்றது. கலச புறப்பாடு திருக்கோயிலை வலம் வந்த பின்பு ராஜகோபுரம் மூலவர் கோபுரம் என அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தும் புனித நீர் தெளித்தும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு குங்குமம், கலசம் உள்ளிட்டவை பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஆர் டி சேகர், செயலாளர் முத்து செல்வன் , பொருளாளர் அருள் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் சீடர் ஸ்ரீ சஞ்சீவ ராஜா சாமிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News