காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமா ? திருடர்களின் புகலிடமா?

காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமாகவும், திருடர்களின் புகலிடமாகவும் மாறி வருவதாக காந்திய மக்கள் இயக்கம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தது.

Update: 2021-08-23 10:15 GMT

பட்டு நகரம் , கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தின் நகரின் மையத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இங்கு நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட வகையில் பேருந்துகள் இயங்குகிறது.

இந்நிலையில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் உயர்ந்த சேவையை வழங்காமல் பயணிகள் மற்றும் பொது மக்கள் விரோத செயல்களுக்கு  இருப்பிடமாக உள்ளது


பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி குடிகாரர்களின் மையமாகவும் , பேருந்து நிலையம் முழுவதும் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கூட இல்லாததால் குற்றவாளிகள் கூடராமாக இருந்து நாள்தோறும் குற்றச்செயல் நடைபெறுகிறது.

பேருந்து நிலையம் முழுவதும் சிறார்கள் பிச்சை எடுப்பதும் ,  திருநங்கைகள் பொதுமக்களிடம் அடாவடியாக பணம் வசூலிப்பது என பல நிகழ்வுகள் நடந்து வருவது மனவருத்தத்தை அளிக்கிறது.

பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு காவலர்களின் ரோந்து பணி இல்லாததால் அனைவருக்கும் சாதகமாக உள்ளது.

இது போன்ற அவல நிலைகளை கலையவே காவல் நிலையம் ,  பொதுமக்களின் பாதுகாப்புக்கு சிசிடிவி கேமராக்கள், தரமான குடிநீர் , பாலூட்டும் அறை திறப்பு  என அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிின்மனு அளிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்து  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்

Tags:    

Similar News