காஞ்சிபுரம் அருகே விவசாயி வெட்டி படுகொலை

காஞ்சிபுரம் அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Update: 2021-05-17 16:15 GMT

காஞ்சிபுரம் அருகே திருப்புக்குழி தாந்தோணி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ஏழுமலை இவரது மகன் சட்டநாதன் வயது (43).

விவசாயியான இவர் வயல்வெளியில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த போது   திருப்புக்குழி ஏரிக்கரையில் இன்று மாலை சில மர்ம நபர்கள் இவரை சரமாரியாக கத்தியால்  முகம்,கழுத்து பகுதிகளில் பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சட்டநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும்  பாலுச் செட்டிசத்திரம் போலீசார் விரைந்து வந்து சட்டநாதனின் உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News