காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினர் மாலை அணிவித்து‌ மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் அதிமுகவினர் மாலை அணிவித்து பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-02-24 04:00 GMT

பைல் படம்.

மறைந்த முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலை மாவட்ட அம்மா பேரவை சார்பில் அலங்கார வளைவுகள் அமைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு பழங்கள் படையிலிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி, திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் , நகர செயலாளர் ஸ்டாலின்,  தும்பவனம் ஜீவானந்தம்,  ஆகியோர் மலர்மாலை தூவி மரியாதை செய்து வணங்கினர்.

அதன்பின் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. 

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பேருந்து நிலையம்,  பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு பேங்க் , தேரடி , வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதே போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

Tags:    

Similar News