காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளுக்கே 'டப்' கொடுக்கும் சுயேச்சை வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர் இ.பத்மாவதி தீவிர பிரச்சாரம்.

Update: 2022-02-16 05:40 GMT

பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி இளங்கோவன்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் மூன்று தினங்கள்  உள்ள நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 6 மணி முதலே நகர வீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாகவே முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமே தங்கள் பலத்தை எதிராளி உணர அதிக ஆட்களை சேர்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

31வது வார்டு பகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பத்மாவதிஇளங்கோவன் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் பச்சையப்பன் மகளிர் கல்லூரி சுற்றியுள்ள வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இப்பகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அதிமுக, பாமக, பாஜக ஆகிய பெரும் கட்சிகளுக்கு  இணையாக களம் கண்டு பெரும் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். இவர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மனோகரன் என்பவர் உறவினர் ஆவார்.

Tags:    

Similar News