அம்மா உணவக அலங்கார உள்கூரை நொறுங்கி விழுந்தது.பெரும் விபத்து தவிர்ப்பு.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் அலங்கார உள்கூரை முற்றிலும் அதிகாலை சேதம் அடைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2021-04-20 02:15 GMT

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை  நுழைவுவாயில் அருகே காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது.

காலை 6 மணிமுதல் மாலை 3 மணி வரை இந்த உணவகம் இயங்கும். அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள், நோயாளிகளுடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை எளிய உணவுகள் உண்டு வந்தனர்.

உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க பால்ஸ் சிலிங் எனும் அலங்கார உள்கூரை, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் கலவை கொண்டு  அமைக்கப் பட்டிருந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில் பால்ஸ் சீலிங் முழுவதும் கீழே விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அதனுடன் அமைக்கப்பட்டிருந்த மின்விசிறிகள் அனைத்தும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது.

அதிகாலையில் இச்சம்பவம் நடைபெற்றதால் நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை. 

Tags:    

Similar News