காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 230 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

Update: 2023-11-27 10:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில்,  7  மாற்றுத்திறனாளி  பயனாளிகளுக்கு,  பாதுகாவலர்  நியமன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்   உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஸ்ரீதரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  மலர்விழி  மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News