இந்து சமய‌அறநிலைதுறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-05-12 08:30 GMT

தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும்,  அவர்களின் உதவியாளர்களுக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாள்தோறும் உணவு வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்

அதன்படி இந்து சமய அறநிலைத்துறை காஞ்சி மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் 500 நபர்களுக்கு இன்று தரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டது.

தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகிகள்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நோயாளிகளுக்கும் அவருக்கு உதவி புரிய வந்துள்ள உறவினர்களுக்கும் உணவுகளை குடிநீர் பாட்டிலுடன் வழங்கினர்.

Tags:    

Similar News