தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்தி, துவக்கி வைத்த கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

Update: 2021-08-13 05:30 GMT

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.







காஞ்சிபுரம்  மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் குறித்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை அதிக அளவில் விழிப்புணர்வு செய்யும் வகையில் நகர கிராமங்கள் தோறும் வாகனம் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று இவ்வாகனத்தினை கலெக்டர் ஆர்த்தி தொடங்கிவைத்தார்.

இவ்வாகனத்தில்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள்,  தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள், சீம்பால் இன் நன்மைகள் ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் உள்ளிட்டவை குறித்த விளம்பர பதாகைகள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சற்குணம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News