காஞ்சிபுரம் : நவராத்திரி விழா 8ம் திருநாள் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலி
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி 8ம் திருநாளில் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மையார் அருள்பாலித்தார்.
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு நவராத்திரியினையொட்டி ஏலாவார்குழலி அம்மைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நேற்று நவராத்திரி எட்டாம்நாள் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் புறப்பாடு நடைபெற்றது.
இதில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகில் உள்ள 16 கால் மண்டபம் வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.