வரதராஜ பெருமாள் அர்த்த மண்டபத்திற்கு வெள்ளிக் கதவு: காணிக்கையாக வழங்கிய பக்தர்

வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு சிறப்பு பூஜைகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டது.

Update: 2023-08-10 13:15 GMT

வரதராஜ பெருமாள் திருக்கோயில் அர்த்த மண்டப கதவு தற்போது வெள்ளி மூலம் பக்தரின் காணிக்கையால் அலங்கரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு பக்தர் குடும்பத்தினர் 32 கிலோ வெள்ளியால் செய்து நன்கொடையாக வழங்கிய  நிலையில் கருவறையில் பொருத்தப்பட்ட கதவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து திறக்கப்பட்டது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் ,  உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திகிரி மலைமீது கோவில் கருவறை கொண்டு மூலவர் வரதராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

மூலவர் வரதராஜ பெருமாள் அருள் பாலித்து வரும் கருவறைக்கு வெளியே துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு சென்னையை சேர்ந்த பக்தர் கிரிதர் குடும்பத்தினர் தங்களது வேண்டுதலின்படி வெள்ளிக் கதவு செய்து வழங்க கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர்.

அதன்படி சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் செய்யப்பட்ட 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மரக்கதவிற்கு பல்வேறு விதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 32 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவினை செய்து கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் பொருத்தி நன்கொடையாக வழங்கினார்கள்.

புதிய கதவிற்கான சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளபட்ட போது.

கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் புதியதாக பொருத்தப்பட்ட வெள்ளி கதவிற்கு கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து வெள்ளி கதவை திறந்து வைத்தனர். அதன் பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெள்ளிக் கதவினை திரளான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, வரதராஜ பெருமாளை வணங்கி வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News