அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி குழு சார்பில் காஞ்சிபுரம் செய்யாறு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் குறைந்த கால ஆண்டுகளில் பணி வழங்க அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை சீரழிக்கும் திட்டம் என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளுடன் நடந்து முடிந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகளின் முன்னணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நந்தகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்ந்த நேரு , பெருமாள் மற்றும் வாலிபர் சங்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதன்பின் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.