சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வழக்கில், வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-07-08 12:30 GMT

காஞ்சிபுரத்தில் போக்சோவில் வாலிபர் கைது

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியை சேர்ந்த அப்சல் என்ற வாலிபர் சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட அப்சல் மீது போக்சோ சட்டம் சார்ந்த வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

காணாமல் போன சிறுமியை  சிவகாஞ்சி காவல் துறையினர் 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிபடையினரை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினார்.

Tags:    

Similar News