கணவனை வெட்டி கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்: மனைவியின் தம்பி கைது

காஞ்சிபுரத்தில் கணவனை வெட்டி கொலை செய்த வழக்கில், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி லோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

Update: 2021-07-31 05:30 GMT

பெரிய காஞ்சிபுரம், மளிகை செட்டி தெருவில் வசித்து வருபவர் நவ்ஷத். இவரது மனைவி பசியா மற்றும் இரு குழந்தைகளுடன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் அதிகம் உள்ளதால் குடும்ப செலவிற்கு  பணம் சரிவர அளிப்பதில்லை. இதனால்  கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.

இரு நாட்களுக்கு முன் இரவு வழக்கமான தகராறு கொலையாக மாறியது. நவ்ஷத் தனது மனைவி நசியாவை கத்தியால் வெட்ட முயற்சி செய்த போது அதிலிருந்து தப்பி கத்தியை பிடுங்கி கணவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அதையடுத்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார். காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து நசியா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது நசியாவின் தம்பி லோகோஷ் தானும் வெட்டியதாகவும்,  குடும்பத்தின் கருதி வெளியே சென்று விடுமாறு அக்கா கூறியதால் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து லோகேஷ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக  அவர் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் லோகேஷ்க்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. குடிப்பழக்கம் தன் குடும்பம் மட்டுமில்லாது தன்னை சார்ந்த குடும்பங்களையும் அழித்து விடும்.

Tags:    

Similar News