காஞ்சிபுரம் : அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

அதிமுக கழக அமைப்பு செயலாளரும் , கழக செய்தி தொடர்பாளரும் , முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராபங்கேற்று சிறப்புரையாற்றினார்

Update: 2022-09-15 15:30 GMT

சிறப்பு அழைப்பாளராக மாநில கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசினார்

தமிழகம் முழுவதும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் பேரறிஞர் அண்ணாதுரையின் 114 வந்து பிறந்தநாள் விழா இன்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில்  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து மாலை காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா கலந்து கொண்டு அண்ணாவின் செயல்திட்டங்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.தற்போது செயல்படுத்தும் காலை உணவு திட்டத்திற்கு அடிப்படை அதிமுக ஆட்சியில் செயல்பாடே காரணமும் , சத்துணவு திட்டம், அதனை தொடர்ந்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஜெயலலிதா சத்தான உணவுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன்,  மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம்,  மாநகர கழக பகுதி செயலாளர்கள் பாலாஜி , கோல்ட்ரவி, ஜெயராஜ் , முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.டி.சேகர் , ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், களக்காட்டூர் ராஜி உள்ளிட்ட  அதிமுக நகர , பேரூர் , ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News