மீண்டும் செயல்பட துவங்கியது அம்மா உணவகம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே இயங்கி வந்த அம்மா உணவகம் புனரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

Update: 2021-05-04 05:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ளது அம்மா உணவகம். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரமான மலிவு விலை சிற்றுண்டி பெற்று உண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உணவகம் உள்ளே அமைக்கப்பட்ட அலங்காரக் கூரை அதிகாலை 2 மணியளவில் முற்றிலும் சேதம் அடைந்து தரையில் விழுந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி அம்மா உணவகத்தை துரிதமாக  சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.  தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாலையிலேயே அதிக அளவில் பொதுமக்கள் வருவதாலும் , உள் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடி உள்ளதால் உணவகத்தில் உணவு வாங்க அதிக அளவில் மக்கள் வருவதாகவும் அவர்களுக்கு ஏற்ப தரமான உணவுகளை வழங்கி வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News