காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சி மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்புமனு வாபஸ்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அளித்த வேட்புமனுக்களை மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 3 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்று நிறைவு பெற்றது.
வாபஸ் பெறுவதற்கு இன்று மாலை 3 மணி நேரம் அவகாசம் உள்ளதால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் காட்சிகள் என பலர் காலை 10 மணி முதல் அந்தந்த அலுவலகங்களில் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக எழுதி அழித்து மனுவை வாபஸ் பெற்று வருகின்றனர்.
மாலை 3 மணிக்கு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த பின் இறுதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு அதில் உள்ள சுயேட்சை வேட்பாளர் சின்னம் ஒதுக்கப்படும்.