காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மேற்கு , கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம், ராஜீ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு கழக வளர்ச்சி மற்றும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
இதன் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் , கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இரு ஒன்றியங்களில் நல்ல வாக்குகளை பெற்றுள்ளது.
இணைந்து செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறவேண்டும். அதன் மூலம் அதிமுகவின் பலத்தை மீண்டும் திமுகவுக்கு நிரூபிப்போம் என கேட்டுக்கொண்டார்.