வாலாஜாபாத் அருகே கேஸ் சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்து
Fire Accident -வாலாஜாபாத் அருகே கேஸ் சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
Fire Accident - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஏ.எஸ். என். கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவாநந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.
இதன் காரணமாக வீட்டின் அருகிலேயே இருந்த ஜீவானந்தம், பூஜா,சந்தியா, நிவேதா,கோகுல், மற்றும் லாரி ஓட்டுனர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இவர்கள் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்யிட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம் மறைமலைநகர் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2