தாலி கட்டிய கையோடு நீட் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தம்பதியர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த இளைஞர் அணி வட்ட செயலாளர் யுவராஜ்- வைஷாலி திருமணம் காஞ்சியில் நடைபெற்றது.

Update: 2023-08-20 06:00 GMT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்வுக்கு எதிரான அறவழி போராட்டத்தில் கலந்துகொண்ட புதுமண தம்பதிகள் யுவராஜ் - வைஷாலி .

தாலி கட்டி முடித்த கையோடு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகள் வீட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அணி மருத்துவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக மாபெரும் அறவழி போராட்டம் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட, ஓன்றிய நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 9 மணி அளவில் இந்த அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான நிலை குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதி இளைஞர் அணி இளைஞர் அணி வட்ட செயலாளர் யுவராஜ் க்கும் , சென்னை , திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த வைஷாலி என்ற பெண்ணுடன் காலையில் காஞ்சிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிவுற்ற நிலையில் திருமண கோலத்துடன் காந்தி சாலையில் நடைபெற்ற நீட் தேர்விற்கு எதிரான அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் மணமக்கள் கோலத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீட் தேர்விற்கு எதிராக மணமகன் கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்து கையெழுத்திட்டனர்.

திருமண கோலத்தில் அறவழி போரட்டத்தில் கலந்து கொண்ட இச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News