காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 7வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் நாளை 7வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-10-29 02:45 GMT

தமிழகம் முழுவதும் விடுமுறை நாட்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதேபோல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை களில் இருபத்தி நான்கு மணி நேரமும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆறு சிறப்பு தடுப்பூசி முகாம் வெளியிலும் பல லட்சம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும் தங்களை சுற்றியுள்ளவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு தற்போது இரண்டாவது தவணை செலுத்தும் காலம் வந்து கொண்டிருப்பதால் மாவட்டங்கள் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளிலிருந்து சனிக்கிழமைகளில் கடந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 தடுப்பூசி முகாம் நாளை 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்கள் தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News