மாநகராட்சி பணியாளர்களுக்கு 2ம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி
மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்கில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் அண்ணா அரங்கத்தில் ஆணையர் கண்ணன் தலைமையில் காலை துவங்கியது.
இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின் செலுத்தபடுகிறது.
இம்முகாமில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.