ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் , மதுரவாயல் அம்பத்தூர் , ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் , பல்லாவரம் தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது.

Update: 2024-03-31 13:15 GMT

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பே கடந்த மூன்று மாத காலமாகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி வாக்காளர் சேர்த்தல் நீக்கல் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம்களை தமிழக முழுவதும் நான்கு கட்டங்களாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் வெளியிடப்பட்டு அது குறித்தும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 11லட்சத்து 80 ஆயிரத்து 263 ஆண்‌ வாக்காளர்களும் , 12 லட்சத்து 01 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்களும் , 429 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23,82,119 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் :

மதுரவாயல்  : 4,28,244

அம்பத்தூர் :  3,57,624  ,

ஆலந்தூர்  :   3,83,424

ஸ்ரீபெரும்புதூர் : 3,83,424

பல்லாவரம். :   5,30,409

தாம்பரம்  :  3,99,088


மொத்த வாக்காளர்கள் : 

ஆண் :  11,80,263

பெண் : 12,01,427

இதரர் :  429

மொத்தம் : 23,82,119

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை பல்லாயிரம் சட்டமன்றத் தொகுதியிலே அதிக வாக்காளர்களாக 4,30,409 வாக்காளர்களும் , குறைந்தபட்சமாக அம்பத்தூர் தொகுதியில் 3,57,624 வாக்காளர்களும் உள்ளனர்.

Tags:    

Similar News