தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

Update: 2021-03-08 06:30 GMT

காஞ்சிபுரத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

உலகமெங்கும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பெண்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் எனவும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் , அரசு பெண் அலுவலர்கள் என பலர் இணைந்து வண்ண வண்ண கோலங்கள் வரைந்து 100சதவீதம் வாக்களிப்போம் , வாக்கு விற்பனைக்கு அல்ல மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதினர்.

இக்கோலங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்டோர் பார்வையிட்டு மகளிர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News