ஆதார் திருத்தம்: காலையிலேயே குவியும் பொதுமக்கள்
மத்திய மாநில அரசுகளின் நல திட்ட உதவிகள் மற்றும் அடையாள சான்றுகளுக்கு தேவைப்படும் ஆதார் அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாலையிலேயே பொதுமக்கள் அரசு அலுவங்களுக்கு வருகை புரிகின்றனர்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பல திட்ட உதவிகள் பெற, கல்வி , வேலைவாய்ப்பு , வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அடையாள சான்றாக பயன்படுகிறது ஆதார் அடையாள அட்டை.
கடந்த காலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட போது இதன் பயன் அறியாத பொதுமக்கள் தங்களின் சுய விவரங்களை முறையாக தெரிவிக்காமல் ஆதார் அட்டைகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது பெயரில் எழுத்து பிழைகள், தொலைபேசி எண் இணைப்பு, முகவரி மாற்றம் என பல தேவைகளுக்கு ஆதார் சேவை மையம், வங்கிகளில் செயல்படும் சேவை மையங்களில் அதிகாலை முதலே குவிய தொடங்குகின்றனர். ஆதாரே ஆதாரமாக தற்போது கேட்கபடும் நிலையில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்தி மக்களை அலை அழிக்கும் நிலையை தவிர்க்க அரசு முன் வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.