ஆட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி சுவரொட்டி

Update: 2021-02-04 06:00 GMT

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் சுற்று சுவர்களில் எவ்வித நோட்டீஸ்களும் ஒட்ட கூடாது எனவும் , இதனை மீறும் அச்சக உரிமையாளர் மற்றும் நோட்டீஸ் ஓட்டுவோர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு நுழைவு வாயில்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதை கண்டு கொள்ளாத அச்சக உரிமையாளர்கள் , நோட்டீஸ் ஓட்டுபவர்கள் அதிக பார்வையாளர்களை கவர இங்கு அத்துமீறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

எச்சரிக்கை பலகை அருகே நுழைவு வாயின் இருபுறமும் அதிகளவில் ஒட்டி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே விதிகளை மீறுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காஞ்சிபுரம் பெருநகராட்சி பிற செயல்களில் எப்படி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags:    

Similar News