பெண்கள் பயணிக்க கூடுதல் ரயில் பெட்டி - எம்எல்ஏ கோரிக்கை

Update: 2021-01-27 12:00 GMT

பெண்கள் பயணம் செய்ய கூடுதல் ரயில் பெட்டியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், காஞ்சிபுரம் எம்எல்ஏ., வலியுறுத்தினார்.

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் இன்று ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் இரயில்வே கேட் பராமரிப்பு குறித்தும் அடிப்படை வசதிகள் உள்ளதா, ரயில் நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். கழிவறை , ஊழியர்களின் ஓய்வறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உடனிருந்த காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ., எழிலரசன் , தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசிடம் காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்படாமலிருக்கும் சாலை மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு புதிய இரயில் சேவையை துவக்கவும்,மகளிர் பயணம் செய்ய கூடுதல் பெட்டியை ஒதுக்கீடு செய்யவும்,பழைய காஞ்சிபுரம் இரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த இரயில் நிலையமாக அறிவிக்கக் கோரியும், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இரு ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே புதிய இரயில்வே நிலையம் அமைக்கவும்,வையாவூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரயில்வே கேட்டை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

Tags:    

Similar News