வாகனஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கல்

Update: 2021-01-22 11:15 GMT

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறை சார்பில் விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது.

32வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஒட்டி சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகில் உள்ள பெரியார் தூணில் மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா மற்றும் டிஎஸ்பி., மணிமேகலை தலைமையில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும் சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் ,பின் விளைவுகளைப் பற்றியும் காவல்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டு பின்பு அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News