காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களின் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

சாலை விதிகள், தொழிலாளர் பாதுகாப்பு அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Update: 2022-05-01 06:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட இருசக்கர வாகன மெக்கானிக் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

நாடு முழுவதும் உழைப்பாளர்களின் உழைப்பை போற்றும் வழியில் இன்று மே1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மே தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட இருசக்கர வாகன மெக்கானிக்காளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் காவல் துறை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால், ஹெல்மெட் அணிதல்,  கொரோனா வழிகாட்டு முறைகள், தொழிலாளர் பாதுகாப்பான  முறைகளில் பணிபுரிதல்  குறித்த கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் குமாரராஜன் , துணைத்தலைவர் பாரதி , பொருளாளர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட வண்ணம் தீட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் ரங்கசாமி குளத்திலிருந்து தாலுக்கா அலுவலகம் வரை மே தின பேரணி நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணம் தீட்டும் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் டில்லி பாபு தலைமையில்  இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.


Tags:    

Similar News