இருசக்கர வாகனம் காணவில்லையா !! ஆயுதப்படை மைதானத்துக்கு வாங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தொலைத்தவரா நீங்கள், உடனே காஞ்சி ஆயுதப்படை மைதானத்துக்கு வாங்க உங்கள் வண்டி இருந்தா எடுத்துச் செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் செயல்படும் 14 காவல் நிலையங்களில் வாகன விபத்து மற்றும் உரிமை கோராத வாகனங்களை காவல்துறைத் தலைவர் அறிவுரையின்படி காட்சிப்படுத்தி அதை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப்படை மைதானத்தில் 2500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் காட்சிபடுத்தபட்டுள்ளது.
இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் வாகனங்கள் தொலைத்தவர்கள் தங்கள் வாகனம் என உரிய ஆவணங்களுடன் காவல்துறையிடம் சமர்ப்பித்தால் வாகணங்கள் திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாகன விபத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என அனைத்தும் உள்ளது.