பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு

காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெற் பயிருக்கு 447 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 260, பருத்திக்கு 470 ரூபாய் ஆகும்.

Update: 2021-10-28 12:45 GMT

கலெக்டர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம், பருத்தி, நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டடுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீதர் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெற்பயிருக்கு வரும் நவம்பர் 15ம் தேதி மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு வரும் 31ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெற் பயிருக்கு 447 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 260, பருத்திக்கு 470 ரூபாய் ஆகும். மேலும், பதிவு செய்வதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் கொண்டு, அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News