ஈரோடு மாவட்டத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை பணியிடம் மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-08 11:00 GMT
தமிழகத்தில், 76 டி.எஸ்.பி கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை, பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளார். சத்தியமங்கலம் டி.எஸ். பி.யாக, காத்திருப்பு பட்டியலில் இருந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படை டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஜாகிர் உசேன், மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்திற்கு நீலகிரி மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றிய சசிக்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படையில், ஏற்கனவே காலியாக இருந்த டி.எஸ்.பி. பணியிடத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News