கோபிசெட்டிபாளையம் அருகே ஸ்கூட்டர் திருடியவர் கைது

Bike Theft - கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த, ஸ்கூட்டரை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-09 05:45 GMT

கைது செய்யப்பட்ட மகேந்திரன்.

Bike Theft - ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 56). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 5-ம் தேதி சங்கரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 46) என்பதும், அவர் தான் சங்கர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடியதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் மகேந்திரன் மீது ஏற்கனவே சத்தியமங்கலம், பங்களாப்புதூர், கோபி ஆகிய பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருடிய வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News