ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Kalpana Chawla Awards -ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-10 05:15 GMT

பைல் படம்

Kalpana Chawla Awards - ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் வீர, தீர, சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் காசோலை முதல்வரால் வழங்கப்படுகிறது. அந்த விருது பெற தற்போது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தகுதியான பெண்கள் தங்கள் கருத்துருவுடன், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை வருகிற ஜூன் 24-ந்தேதிக்குள் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News