அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின விழா

ஈரோடு வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில், அந்தியூரில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 09:15 GMT
ஈரோடு வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஈரோடு புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் முன்னாள் இராணுவ வீரர் ராஜாக்கவுண்டருக்கு கட்சியின் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.குருநாதன், அவைத்தலைவர் செல்வகுமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், மாவட்ட துணை செயலாளர் சேதுபதி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ராசா, அம்மாபேட்டை ஒன்றிய பிரதிநிதி மணி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News