ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 24,724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில், பூஸ்டர் தடுப்பூசி, 19,805 பேருக்கு செலுத்தப்பட்டது.

Update: 2022-09-19 10:15 GMT

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  நடந்தது.முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 675 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4,244  பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Similar News