ஈரோடு லாட்ஜில் கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு லாட்ஜில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-17 06:00 GMT

கேரளா மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத் (வயது 37). ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனில்பாத் எதற்காக ஈரோட்டுக்கு வந்தார்? குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்று பல கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News