அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு ஆண்டு விழா கொண்டாட்டம்: 17 பேருக்கு தங்கக்காசு

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு 12ம் ஆண்டு விழாவில் 17 உறுப்பினர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டது.

Update: 2022-01-12 05:58 GMT

பொங்கல் பண்டிகை பரிசாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் புடவையும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

அரியலூரில் 12 வருடமாக செயல்பட்டு வரும் நேதாஜி மகளிர் சுய உதவி குழு, தனது 12 ஆவது ஆண்டு தின விழாவை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதலுடன் ஜீவா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நேதாஜி மகளிர் சுய உதவி குழு என இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு மகளிர் குழுக்களிலும் பெரும்பாலோனோர் அரியலூர் நகராட்சியில் சுகாதாரப் பணி செய்யும் தொழிலாளர்கள் ஆவார்கள்.

நேதாஜி மகளிர் சுய உதவி குழுவின் 12வது ஆண்டு விழாவான இன்று இக்குழுவின் லாபத் தொகையில் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் 2 கிராம் தங்கக்காசு வீதம் 17 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை பரிசாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் புடவையும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

குழுவின் நோக்கங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் டி. தண்டபாணி அவர்கள் விளக்கிப் பேசினார். சுபிக்சா தொண்டு நிறுவன அமைப்பாளர்  மகேஸ்வரி கலந்துகொண்டு இக்குழு மூலம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி. ஆறுமுகம் கலந்துகொண்டு உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

Tags:    

Similar News