குழந்தையுடன் மாயமான பெண் : போலீசார் வழக்குப்பதிவு
கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் போலீசார் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
\அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி சீதா தனது 3 வயது மகளை அழைத்து கொண்டு, அரியலூருக்கு ஆதார் அட்டை எடுக்க சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.