செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
அரியலூர் அடுத்த செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த மாராக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செம்மலை மனைவி அன்னலட்சுமி(35). இவர், இன்று மதியம் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்ததுடன், மின்னல் பாய்ந்துள்ளது. மின்னல் அன்னலட்சுமி மீது பாய்ந்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த குவாகம் போலீஸார், அன்னலட்சுமி உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.