பிரதமர் மோடி உரையாற்றும்"நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி"

விவசாயிகளுக்கான கையேடு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-05-31 11:24 GMT

 "நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி" விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, எம்எல்ஏ கண்ணன் மற்றும் பலர்.  

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் "நலிந்தோர் நல்வாழ்வு மாநாட்டின் காணொளி காட்சி" மற்றும் விவசாயிகளுக்கான கையேடு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News