போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 29 ம் தேதி ஏலம்:எஸ்பி தகவல்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 27 இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது

Update: 2022-03-27 14:22 GMT

அரியலூரில் காவல்துறையினரால் ஏலம் விடப்படவுள்ள வாகனங்கள்

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 27 இரண்டு சக்கர வாகனங்கள் 29.03.2022 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல் பிரிவு, அரியலூர் மாவட்ட அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498165793, 9498159595 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 29.03.2022 காலை 08.00 மணிக்கு ரூ.1000முன்தொகை செலுத்தி தங்களது பெயர் முகரியை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை.

வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து பிற்பகல் 3 மணிக்குகள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வைப்புத்தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்ததவறினால் வைப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது.

ஏலம் ரூ.100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. வாகனங்களை 27.03.2022-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம்.ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News