மருதையாற்றில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்பு
மருதையாற்றின் இரு கரைகளிளும் மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தல்.
மருதையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரவு பெய்த மழையினால் கொட்டரை நீர்த்தேகத்திற்கு உள்வாயில் மற்றும் உபரிநீர் போக்கியில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்புள்ளதால் ஆற்றின் இரு கரைகளிளும் மக்கள் ஆற்றின் அருகேவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.