இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், 2 பேர் பலி
அரியலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு, நேராக மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்.
அரியலூர் அருகே கல்லங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜூவ் இவர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் சமையலர் ஆக பணியாற்றி வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் இவர் தச்சு வேலை செய்துவந்தார். இந்நிலையில் இரவு அரியலூரில் இருந்து சமையலர் ராஜூவ் இருசக்கர வாகனத்தில் கல்லங்குறிச்சி சென்ற போது குறைதீர்க்கும் முருகன் கோவில் என்ற இடத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் கல்லங்குறிச்சியில் இருந்து அரியலூர் வந்த ஆசாரி ராஜேஷ் குமார் வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.