சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-17 04:38 GMT

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்.

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன்(35) கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பழுதுபார்க்கும் போது, அந்த வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அதேபோல், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி(20). குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றநிலையில், அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் பழகி, ஆசைவார்த்தை கூறி கடந்த அக்டோபர் 1 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.



Tags:    

Similar News