சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது: 729 பாட்டில் பறிமுதல்

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது 729 பாட்டில் பறிமுதல்.

Update: 2022-06-20 07:18 GMT

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற வந்த இருவர் கைது 729 பாட்டில் பறிமுதல்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்களை ஜெயங்கொண்டம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 729 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் ஆதிச்சனூர் மெயின் ரோடு ராமதாஸ்(33) மற்றும் வடகடல் வடக்குதெரு கலைவாணி(40) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய அன்புமணி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News