கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைய குற்றங்கள் தடுப்பது குறித்து பயிற்சி

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையக் குற்றங்கள் தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-07-04 13:06 GMT
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு  இணையக் குற்றங்கள் தடுப்பது குறித்து  பயிற்சி அளிக்கப்பட்டது.


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, இன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசினர் தொழிற்பள்ளியில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. இதில் சைபர் கிரைம் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் தலைமையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் க.சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டு, அரியலூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் க.தேவகி முன்னிலையில், இணையக் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், இணையக் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும், வங்கி மோசடி குறித்து 14440-க்கு எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்தனர். இதில் சுமார் 85 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News